Saturday 14 June 2014

மதுரைக்காரி!!



மதுரைக்காரி


அண்ணஞ் சொல்லி கேட்டதில்ல,
ஆயிஅப்பந் திட்டி திருந்தவில்ல,
அலப்பரை பண்ணி திரிஞ்சவந்தேன்,
அழும்பு பேசி அலைஞ்சவந்தேன்.

ஒத்தக்கடை ஊர்க்காரி - உன்
ஒசரம் காட்டி வுழுக வச்ச,
ஓரப்பார்வை பாத்து பாத்து
ஒசக்க என்ன பறக்க வச்ச.

பட்டறய போட்டு திரிஞ்ச மனச
ஆட்டய போட்டு அலைய வுட்ட,
எட்ட நின்னு சாட பேசி
கெட்ட கிறுக்கு புடிக்க வுட்ட.

காவாலிப் பய காலு ரெண்டும்
களவாணி உன்வாசப் பக்கம், 
கருக்க வரை அலையுதுடி,
காத்து காத்து நின்டு நின்டு,
கால்ல ஆணி முளைக்குதுடி.

அழக கட்டிக்க ஆச சொன்னேன்
அராத்து பண்ணி அழுக வச்ச,
எதுர வந்தும் நெசம் சொல்லாம
மதுரக்கார மனம் மறுக வச்ச.

வீம்பு போதும் பொட்டப்புள்ள,
வம்புக்காரி, உன் எதயத்துள்ள,
இம்புட்டுகோண்டு இடங் கிடைக்க 
எம்புட்டு காலம் காத்து கெடக்க.

No comments:

Post a Comment